5.எழுந்தருளியுள்ள திருக்கோலம்
பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்திலும், நாச்சியார் வடக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்திலும் எழுந்தருளியுள்ளனர். மார்க்கண்டேயர் தெற்கு நோக்கி அமர்ந்து கன்னிகாதானம் செய்யும் கோலத்தில் காட்சி தருகின்றார்.
6. திருமேனிகள்
இவ்வெம்பெருமான் நம்மாழ்வாருக்கு ஐந்து வடிவங்களுடன் காட்சியளித்ததாகத் தெரிகின்றது. அவை பொன்னப்பன் - மணியப்பன் - முத்தப்பன் - என்னப்பன் - திருவிண்ணகரப்பன். இந்த ஐவரையும் நம்மாழ்வார் பெயரிட்டுப் பாடியுள்ளார்.
|